தற்கொலை முயற்சியில் கைக்குழந்தைக்கு இப்படியொரு அதிர்ஷ்டம் - ஆனால்?

ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் கைக்குழந்தை மட்டும் அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப்பட்டு உள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் ரயில் நிலையம் அருகே பெண்(30) ஒருவர் இன்று அதிகாலை தனது கைக்குழந்தை உடன் நடந்து சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பெங்களூருவை நோக்கி செல்லும் மயிலாடுதுறை விரைவு ரயில் முன்பு திடீரென பாய்ந்து தற்கொலைக்கு


இதில் பெண் குழந்தை மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. ஆனால் அப்பெண் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைக் கண்ட பொதுமக்கள் உடனே ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.


சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் கைக்குழந்தையை மீட்டு ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து உயிரிழந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட பெண் யார் என்று இதுவரை தெரியவில்லை.


Popular posts
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோணா நோய்த் தொற்று கட்டுபடுத்துதல் பற்றிய சிறப்பு ஆய்வு கூட்டம் நடைபெற்றது
Image
திருவண்ணாமலையில் நகராட்சி மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலமாக நாள்தோறும் 2000 நபர்களுக்கு மூன்று வேளை உணவு அளிக்கப்படுகிறது.
Image
திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் சி. வெ. கணேசன் அவர்கள் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கினார்
Image
தேனி மாவட்டத்தில் அரசு கண்மாய்கள் ஆக்கிரமிப்பு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கால்நடை உரிமையாளர்கள் கோரிக்கை
Image
மராட்டிய மாநிலம் மும்பை ஜோகேஷ்வரி பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் நேற்று இரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.