பாளை மத்திய சிறைச் சாலையில் ஆயுள் தண்டனை கைதி திடீர் சாவு - சிறையில் பரபரப்பு

பாளை மத்திய சிறைச் சாலையில் ஆயுள் தண்டனை கைதி திடீர் சாவு - சிறையில் பரபரப்பு



பாளை மத்திய சிறையில் தாயை கொலை செய்த வழக்கில் கைதான குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி திடீரென இறந்தார். 


குமரி மாவட்டம் கருங்கல் போலீஸ் சரகம் மாதாபுரத்தை சேர்ந்தவர் ஜோசப் ராஜ். இவரது மகன் வினோஜ் பல்டன் (40). இவர் வேலைக்கு செல்லாமல் ஊதாரித்தனமாக சுற்றி வந்தாராம். மேலும் அவருக்கு குடிப்பழக்கமும் இருந்து வந்ததாம். இதனால் மனைவி பிரிந்து சென்று விட்டதாக தெரிகிறது. இதையடுத்து வினோஜை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதில் ஆத்திரமடைந்த வினோஜ் கடந்த 2012 ஆம் வருடம் அவரது தாயை கொலை செய்து உள்ளார். இது குறித்து கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து வினோஜை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 


இதையடுத்து வினோஜ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு உடல்நிலை பாதிக்கப் பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தாராம்.  இன்று காலை வினோஜ் உடல் நிலைமோசம் அடையவே சிறைக்காவலர்கள் அவரை பாளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வினோஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Popular posts
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோணா நோய்த் தொற்று கட்டுபடுத்துதல் பற்றிய சிறப்பு ஆய்வு கூட்டம் நடைபெற்றது
Image
திருவண்ணாமலையில் நகராட்சி மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலமாக நாள்தோறும் 2000 நபர்களுக்கு மூன்று வேளை உணவு அளிக்கப்படுகிறது.
Image
திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் சி. வெ. கணேசன் அவர்கள் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கினார்
Image
தேனி மாவட்டத்தில் அரசு கண்மாய்கள் ஆக்கிரமிப்பு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கால்நடை உரிமையாளர்கள் கோரிக்கை
Image
மராட்டிய மாநிலம் மும்பை ஜோகேஷ்வரி பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் நேற்று இரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.